Header Ads

Header Ads

தனது பிள்ளையை கொலை செய்து ஆற்றில் குதித்த தாய் விளக்கமறியலில்…

தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் களனி கங்கையில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சம்பவம் தொடர்பில் குறித்த தாய் மே 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று மஹார நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தாய் தற்கொலைக்கு முயற்சித்த வேலை நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவனது உடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலையில் பியகம பகுதியில் பெண் ஒருவர் அவரது மகனுடன் களனி கங்கையில் குதித்தார். இதன்போது அருகில் இருந்தவர்கள் பெண்ணை காப்பாற்றிய நிலையில் சிறுவர் காணாமல் போயிருந்தார்.

உடலம் மீட்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில், குறித்த பெண் தமது ஆறு வயதான மகனின் தலையை பாலத்தின் மீது மோதி கொலை செய்ததன் பின்னர் ஆற்றில் குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments:

Powered by Blogger.