Header Ads

Header Ads

ஜெர்மன் பெண்ணுக்கு தமிழகத்தில் நேர்ந்த கொடுமை! மருத்துவ பரிசோதனையில் திடுக் தகவல்

தமிழகம், மாமல்லபுரம் கடற்கரையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கடந்த இரு வாரத்திற்கு முன்பு, ஜெர்மன் நாட்டிலிருந்து 5 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இந்தியா வந்தனர். பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்த அவர்கள், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில், அங்குள்ள கடற்கரை பகுதியில் சூரிய குளியல் செய்துவிட்டு விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஜெனி என்பவரை அப்பகுதியை சேர்ந்த 2 பேர் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஜெனி, தனது நண்பர்களுக்கு தகவல் அளித்தார். அவர்கள் முதலில் ஜெர்மன் நாட்டு தூதரகத்திற்கும், ஜெர்மனில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
பின்பு மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜெர்மன் பெண் ஜெனிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹிதாமனி நேரில் விசாரித்து வருகிறார்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து பொலிஸார் தீவீரமாக தேடி வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.