Header Ads

Header Ads

காதலியை 6 பேருடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற காதலன் - மீண்டும் பயங்கரம்

இந்தியாவில் திருமணம் செய்ய மறுத்த காதலியை 6 நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள Rohtak என்ற நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே நகரை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை சுமித் குமார் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால், ஒரு சூழலில் திருமணம் செய்ய முடியாது என காதலி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த காதலன் சரியான நேரம் பார்த்து காத்திருந்துள்ளார். கடந்த மே 9-ம் திகதி அலுவலகத்திற்கு செல்ல பெண் புறப்பட்டபோது அவரை காரில் காதலன் கடத்தியுள்ளார்.
பின்னர், தனது 6 நண்பர்களை வரவழைத்து இளம்பெண்ணை துடிக்க துடிக்க கற்பழித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பின்னர் பொலிசாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக இளம்பெண்ணின் தலையை கல்லால் அடித்து சிதைத்துள்ளனர்.
இதிலும் திருப்தி அடையாத கொடூரன்கள், இளம்பெண்ணை கீழே படுக்க வைத்து அவரது தலை மீது காரை ஏற்றியுள்ளனர். பின்னர், உடல் முழுவதும் சிதைக்கப்பட்டதும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு பின்னர், ஓரிடத்தில் மனித உடலை நாய்கள் கடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த நபர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
பொலிசார் சோதனை செய்தபோது அது காணாமல் போன இளம்பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையை தீவிரப்படுத்திய பொலிசார் சுமித் குமார் மற்றும் அவருடைய மற்ற ஒரு நபரை கைது செய்துள்ளனர். இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக இருவரும் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Powered by Blogger.