Header Ads

Header Ads

8 விரலை காட்டிய வாரிசு நடிகை, தெறித்து ஓடிய பிரபாஸ் பட இயக்குனர்

பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா கபூர் ரூ. 8 கோடி கேட்டதும் சாஹோ படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டார்களாம்.

பிரபாஸ் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1, 400 கோடி வசூல் செய்துள்ளது. தினம் தினம் பாகுபலி 2 படம் புதிய சாதனைகள் படைத்து வருகிறது.

பாகுபலிக்காக பிற படங்களில் நடிக்காமல் இருந்த பிரபாஸ் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

பாகுபலி 2 படத்தை அடுத்து சுஜீத் இயக்கத்தில் சாஹோ தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். தற்போது அமெரிக்காவில் ஓய்வில் இருக்கும் பிரபாஸ் நாடு திரும்பியதும் படப்பிடிப்பு துவங்குகிறது.

கதை சூப்பர் சார், நான் நடிக்கிறேன். ஆனால் சம்பளம் ரூ. 8 கோடி கொடுத்தால் போதும் என்று ஷ்ரத்தா கூறியுள்ளார். அடுத்த நொடியே இயக்குனரும், தயாரிப்பாளரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி வந்துவிட்டார்களாம்.

டோணி படம் மூலம் பிரபலமான திஷா பதானி தெலுங்கு படம் மூலம் நடிகையானவர். அவரிடம் கேட்டதற்கு ரூ. 5 கோடி கேட்டாராம். பாலிவுட்டிலேயே திஷாவுக்கு யாரும் ரூ. 5 கோடி தர மாட்டார்கள். அப்படி இருக்கும் போது தெலுங்கில் தரணுமா என்று சாஹோ குழு நடையை கட்டிவிட்டதாம்.

No comments:

Powered by Blogger.