Header Ads

Header Ads

வவுனியாவில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 1000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இந்தியாவில் இருந்து வருகைத்தந்த சிறுமியின் உறவினர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 1000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.