Header Ads

Header Ads

உலக மக்களை உலுக்கிய சிறுவனின் கொலை... பெற்ற தந்தையால் நிகழ்ந்த கொடூரம்!

தனது மகனை கொலை செய்த தந்தையொருவருக்கு அமெரிக்காவில் 25 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மைக்கல் ஜோன்ஸ் என்ற குறித்த நபர் தனது மகனான எட்ரியன் ஜோன்ஸை கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்திருந்தார்.

இக்கொலை நடந்திருந்தமை முன்னர் அறிவிக்கப்படாத நிலையில் அவரது எச்சங்களே கனாஸில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. வெறும் 7 வயதான அச்சிறுவன் பல்வேறு சித்திரவதைகளுக்கு பின்னரே கொலைசெய்யப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்தது.

சிறுவனை துஷ்பிரயோகம் செய்து , பட்டினி போட்டிருந்ததுடன் பின்னர் அவனது சடலத்தை பன்றிக்கு உணவாக்கியிருந்தார், பாதகனான குறித்த தந்தை. குற்றவாளி தனது மகனுக்கு செய்த கொடுமைகள் அங்கிருந்த சி.சி.டிவி கமெராக்களில் பதிவாகியிருந்தது.

நிலத்தில் போட்ட உணவை உண்ணவைத்திருந்தமை, மோசமாக தாக்கியிருந்தமை என பல துஷ்பிரயோகங்கள் இதில் அடக்கம். அச்சிறுவனின் சித்தி கடந்த வருடம் நவம்பர் மாதம் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டிருந்த துடன், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அவரும் அச்சிறுவனை மோசமாக துன்புறுத்தியிருந்தமை விசாரணைகளில் , ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தது. அவர் அதனை படமெடுத்துமுள்ளார்.

தந்தையும் , தாயும் பிரிந்தமையை தொடர்ந்து மகன் தந்தையின் பராமரிப்பில் இருந்துள்ளார். இந்த நிலையிலேயே அவர் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்து, இறுதியில் உயிரிழந்துள்ளார்.

No comments:

Powered by Blogger.