Header Ads

Header Ads

வரும் செப்டம்பரில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி

கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி வரும் செப்டம்பர் மாத வாக்கில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பாற்றலியல் பிரிவு பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிபிசி வானொலி சேவையின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேராசிரியர் சாரா கில்பர்ட், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனைகள் “வெகு விரைவில் நடைபெற உள்ளது.” அது வெற்றியடையும் பட்சத்தில் மிகப் பெரிய அளவில் உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
“நாம் பெருமளவிலான உற்பத்தி திறனை இந்த ஆண்டே அடைய முடியாது என்றாலும் கூட, விரைவில் உற்பத்தியை தொடங்குவது சாலச்சிறந்தது” என்று அவர் கூறுகிறார்.

No comments:

Powered by Blogger.