வவுனியாவில் மாணவி மீது மாணவன் பாலியல் துஷ்பிரயோகம்
வவுனியாவில் பிரபல்யமான பாடசாலை ஒன்றின் மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த மாதம் 31 ஆம் திகதியன்று இரவு பாடசாலை நிகழ்வு ஒன்று மாமடுவ பகுதியில் நடை பெற்றுக்கொண்டிருந்தபோது இதையடுத்து அந்தப்பகுதிக்குச் சென்ற அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் குறித்த மாணவியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். மாணவன் மாணவியுடன் நீண்ட நாள்கள் நட்பு ரீதியில் பழகிவந்துள்ளார் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 18 வயதான பாடசாலை மாணவன் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் இன்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments: