Header Ads

Header Ads

இலங்கையில் இந்தப் பெண் புதிய சாதனையை

திய­கம மஹிந்த ராஜபக்ஷ வி­ளை­யாட்­ட­ரங்கில் நேற்று நிறை­வு­பெற்ற 55ஆவது கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டி­களில் அதி சிறந்த மெய்­வல்­லு­ந­ராக வென்­னப்­புவை திருக்­கு­டும்ப கன்­னியர் மடத்தைச் சேர்ந்த வீராங்­கனை ஹஷினி பிர­போதா பால­சூ­ரிய தெரி­வானார்.
இவ் வருட கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் மொத்­த­மாக 21 புதிய சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­ட­துடன் இரண்டு சாத­னைகள் சமப்­ப­டுத்­தப்­பட்­டன.
போட்­டியின் கடைசி நாளான நேற்­றைய தினம் மாத்­திரம் 7 புதிய சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­டன.
18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் தெல்­லிப்­பழை மகா­ஜன கல்­லூரி வீராங்­கனை சந்­தி­ர­குமார் ஹெரினா 3.01 மீற்றர் உயரம் தாவி புதிய சாதனையை நிலை­நாட்­டினார்.
இப் போட்­டியில் சாவ­கச்­சேரி இந்துக் கல்­லூ­ரியைச் சேர்ந்த எஸ்.சங்­கவி (2.80 மீ.), எஸ்.தார­ணிகா (2.70 மீ.) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்­கலப் பதக்­கங்­களை வென்­றனர்.
ஹெரி­னாவை விட 23 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான சுற்­றியல் எறிதல் போட்­டியில் இரா­ணு­வத்தைச் சேர்ந்த எஸ். பண்­டார (40.27 மீ.), 16 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான குண்டு எறி­தலில் கொழும்பு மகளிர் கல்­லூ­ரியைச் சேர்ந்த சரிஷா குண­சே­கர (11.55 மீ.), 20 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் வென்னப்­புவை திருக்­கு­டும்ப கன்­னி­யாஸ்­தி­ரிகள் மடத்தைச் சேர்ந்த பிர­போதா பால­சூ­ரிய (13.20 மீ.), 23 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான முப்­பாய்ச்­சலில் இரா­ணு­வத்தைச் சேர்ந்த ஏ.கரு­ணா­சிங்க (16.13 மீ.), ஆகியோர் புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர்.
இது இவ்­வா­றி­ருக்க, 20 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான சுற்­றியல் எறிதல் போட்­டியில் பருத்­தித்­துறை ஹாட்லி கல்­லூ­ரியைச் சேர்ந்த எஸ். பிர­காஸ்ராஜ் (25.17 மீ.) தங்கப் பதக்­கத்­தையும் வை. ஜதார்த்தன் (25.25 மீ.) வெள்ளிப் பதக்­கத்­தையும் யாழ். மாவட்ட மெய்­வல்­லுநர் சங்­கத்தைச் சேர்ந்த ஆர். சுஜீவன் (24.44 மீ.) வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்றெடுத்தனர்.
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சுற்றியல் எறிதல் போட்டியில் வவுனியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைச் சேர்ந்த சி. ஜெனோஜன் (31.53 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.

No comments:

Powered by Blogger.