Header Ads

Header Ads

பணத்துக்காக நான்கு இளைஞர்களுடன் ஒரே வீட்டிலிருந்த சிறுமி! - களுத்துறை

இலங்கை - களுத்துறை பிரதேசத்தில் ஒரே வீட்டில் நான்கு இளைஞர்களுடன் இருந்த சிறுமி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுமிக்கு 16 வயது எனவும், இவருடன் இருந்த ஏனைய நான்கு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 பொலிஸ் அவசர தொலைபேசி இலகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளார், தந்தை குடிபோதைக்கு அடிமையானவர், இரண்டு சகோதரர்களும் போதைக்கு அடிமையானவர்கள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

 குறித்த சிறுமி பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவ்வாறு இளைஞர்களுடன் இருந்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.