Header Ads

Header Ads

விலை போகும் ஈழத்தின் பொக்கிஷம்? என்ன தெரியுமா?

இந்தியாவின் மத்திய வங்கி, இலங்கைக்கு வழங்கும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக திருகோணமலை சீனக்குடா துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விமல் வீரவங்ச முன்வைத்த குற்றச்சாட்டுடன் கூடிய இந்த கேள்விக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் 400 மில்லியன் டொலர் பணத்திற்காக இலங்கையில் உள்ள எந்த அரச சொத்துக்களும் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது. நாங்கள் எதனையும் இந்தியாவிடம் அடகு வைக்க மாட்டோம்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்திய மத்திய வங்கி இந்த பணத்தை வழங்க இணங்கியுள்ளது என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அதேவேளை இந்திய மத்திய வங்கியிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் பணத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இருதரப்பு பரிமாற்ற உடன்படிக்கையை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.