Header Ads

Header Ads

மரத்தில் பிணமாக தொங்கிய தொழிலாளி; பொதுமக்கள் அதிர்ச்சி!

கிருஷ்ணகிரி அருகே பனைமரம் ஏறும் தொழிலாளி மரத்திலேயே உயிர் விட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியை அடுத்த கஞ்சனூர் நாடார் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது58) பனை மரம் ஏறும் தொழிலாளி. இன்று காலை 6 மணிக்கு பனை மரத்தில் ஏறினார்.
மரத்தின் உச்சியில் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மரத்திலேயே பிணமாக தொங்கி விட்டார்.
தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மரத்தில் ஏறி பிணத்தை மீட்டு கொண்டு வந்தனர்

No comments:

Powered by Blogger.