Header Ads

Header Ads

கண்டியை உலுக்கிய தீ விபத்து; சிக்கித்தவித்த குடும்பம் மக்களின் உதவியுடன் தப்பியது!

கண்டியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 7 மணியளவில் கண்டி, யட்டி நுவர வீதியில் அமைந்துள்ள நிசாம் காம்ப்ளக்ஸ் என்ற கட்டிடமே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
இதன்போது அக்கட்டடத்தில் மேல் மாடியில் தங்கி இருந்த குடும்ப உறுப்பினர்கள் கீழே இருந்தவர்களின் உதவியுடன் மேல் இருந்து பாய்ந்து தப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
குறித்த தீ விபத்தில் தமிழ் தங்க நகை வியாபாரம் செய்யும் குடும்பத்தினரே சிக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது தீயணைப்பு படையினர் களத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.