Header Ads

Header Ads

மிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் வீசி பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்..! இலங்கையை உலுக்கியுள்ள சம்பவம்

நாவலப்பிட்டி அரங்கலை பகுதியில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் 17 வயது யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இக் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் யுவதி வெளியில் சென்று வருவதற்கு உறவினர் ஒருவரின் முச்சக்கரவண்டியை ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது காதலியை காணக்கிடைக்காத குறித்த இராணுவவீரர் நண்பர்களிடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மிளகாய் தூள் தாக்குதலை காண்பித்து நாமும் இதை கடைப்பிடிப்போம் எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து கடந்த 19 ஆம் திகதி முச்சக்கர வண்டியில் சென்ற யுவதி மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி மீது மிளகாய்த்தூள் கலந்த நீரை வீசி யுவதியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவத்தில் இராணுவ வீரர் உட்பட மூவரைப் பொலசார் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை அண்மையில் தம்புள்ளை நகரில் சுற்றிவளைப்புக்காக சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீதும் மிளகாய் தூள் கலந்த நீரை வீசிவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிளகாய்தூள் தாக்குதலை உதாரணமாக கொண்டு பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Powered by Blogger.