Header Ads

Header Ads

பிரேசிலில் அணை உடைந்ததில் 40 பேர் பலி – 300 பேரை காணவில்லை

பிரேசில் நாட்டில் அணை உடைந்ததில் 40 பேர் பலியாகியுள்ளதாகவும், 300 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் ஹரிஜோண்டே நகரின் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கம் உள்ளது. இதன் அருகே நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த அணை ஒன்று திடீரென உடைந்ததால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர்களின் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால், அங்கிருந்த தொழிலாளர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், இடுப்பளவு சகதியில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான சுரங்க தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால், 40 பேர் இந்த வெள்ளத்தில் சிக்கி பலியாகினர். 

அத்துடன் 300 பேரை காணவில்லை என்றும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வாலே நிறுவன அதிகாரி ஃபேபியோ ஷ்வார்ட்மேன் கூறுகையில், ‘இது மனித குலத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு. விபத்து நடந்த பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி நடக்கிறது’ என தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற, மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.