Header Ads

Header Ads

முல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைத்து 100 மேற்பட்ட மதுபான போத்தல்களை இலங்கையின் சுங்கவரி துறையின் குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முல்லைத்தீவில் உள்ள முதுகடுவ பிரதேசத்தில் வைத்து இன்று கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 45 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 16 ஆண்டுகளாக இத்தாலியில் நிரந்தமாக குடியேறிய நிலையில் இலங்கைக்கு அடிக்கடி வருகை தந்து குறித்த சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்தமை ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Powered by Blogger.