நடிகை தற்கொலை! காதலன் சிக்கினார்
நடிகர் விமல் நடிப்பில் வெளியான மன்னார் வகையறா படத்தில் துணை நடிகையாக நடித்தவர் யாஷிகா. திருப்பூரை சேர்ந்த இவர் சில சீரியல்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பரபரப்பாக பேசப்பட்ட இந்த தற்கொலையில் முக்கிய ஆதாரமாக யாஷிகா அவரது அம்மாவிற்கு வாட்சப் மூலம் அனுப்பிய குறுஞ்செய்தி அமைந்தது.
அந்த செய்தி மூலம் யாஷிகா பெரம்பூரை சேர்ந்த மோகன் பாபு என்பவரை காதலித்து அவருடன் ஒரே வீட்டில் தங்கி வந்ததும் அதன்பின் அவர் யாஷிகாவை தனியாக விட்டு சென்றதும் அதனால் தான் இவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதனால் மோகன் பாபுவை போலீஸார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டார். மேலும், யாஷிகா ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதால், அவரைப் பிரிந்து சென்றதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



No comments: