Header Ads

Header Ads

சாக்லெட் திருடிய பெண்ணுடன் உல்லாசம் பொலிஸாரின் மோசமான செயல்

சாக்லெட் திருடிய பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே ரேப் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள போவெய் பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் மதுக்கூர் ஆவத். இவர், கடந்த பெப்ரவரி 6ம் திகதியன்று பணியில் இருந்தபோது, அப்பகுதியில் உள்ள டி-மார்ட் என்ற கடையில், 20 வயதான இளம்பெண் ஒருவர் சாக்லெட் திருடுவதாகப் புகார் வந்தது.

 இதன்பேரில், சம்பந்தப்பட்ட பெண்ணை, கடை ஊழியர்களே சுற்றி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த பெண்ணை விசாரித்த கான்ஸ்டபிள் ஆவத், ஒரு நோட்டில், இனிமேல் திருடமாட்டேன் என எழுதி கையெழுத்து போட்டு தரும்படி கூறியுள்ளார். மேலும், அந்த பெண்ணின் ஆதார் அட்டை, போன் நம்பரையும் வாங்கிக் கொண்டு, அவரை கண்டிப்புடன் விடுவித்திருக்கிறார். அடுத்த நாள், அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்ட ஆவத், ஹோட்டல் ஒன்றின் பெயரைச் சொல்லி அங்கு வந்து ஆதார் அட்டையையும் வாங்கிச் செல்லும்படி கூறியுள்ளார். 

இதை நம்பி, அந்த இளம்பெண் அங்கே வந்திருக்கிறார். அவரை ஹோட்டல் அறைக்குள் அழைத்துச் சென்ற ஆவத், வலுக்கட்டாயமாக, அவரை மிரட்டி ரேப் செய்துள்ளார். இந்த காட்சியை, அந்த பெண்ணின் செல்போனில் செல்பியாகவும் எடுத்துள்ளார். ஆனால், ஆதார் கார்டை தர மறுத்த ஆவத், திரும்பவும் தன்னை சந்திக்கும்படி மிரட்டியுள்ளார். இந்நிலையில்,சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் இந்த போட்டோவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன்பேரில், தற்போது ஆவத் மீது அவர் பணிபுரியும் போவெய் பொலிஸ் நிலையத்திலேயே கற்பழிப்பு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

No comments:

Powered by Blogger.