Header Ads

Header Ads

இலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியான அதிரடி ரிப்போர்ட்

இலங்கையில் ஒரு வருடத்தில் மாத்திரம் சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 9000 முதல் 10000 வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார பாராளுமன்றில் இதனை தெரிவித்தார்.

“இலங்கையில் ஒரு வருடத்தில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகங்கள், சிறுவர் துன்புறுத்தல்கள் தொடர்பில் 9 ஆயிரம் தொடக்கம் 10 ஆயிரம் வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன.

இதில் கடந்த 2015 ஆம் ஆண்டு 1539 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 9193 சிறுவர் துன்புறுத்தல்களும். 2016 ஆம் ஆண்டு 1275 சிறுவர் துஷ்பிரயோகங்கள், 8086 சிறுவர் துன்புறுத்தல்களும், 2017 ஆம் ஆண்டு 1175 சிறுவர் துஷ்பிரயோகங்கள்,7839 சிறுவர் துன்புறுத்தல்கள் என்பன இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன

No comments:

Powered by Blogger.