Header Ads

Header Ads

நகைக் கடைகளில் கூட்டம்

அட்சய திரிதியையான இன்று (28) நாடு முழுவதிலுமுள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாவது திரிதியையான வளர்பிறை திரிதியை ‘அட்சய திரிதியை’ என்று அழைக்கப்படுகிறது. ‘அக்‌ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’ என்பது அர்த்தம்.
இந்நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என இந்துக்களால் நம்பப்படுகிறது.
குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
அட்சய திரிதியை அன்று சிறிய குண்டுமணி அளவு தங்க நகை வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு வாழலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் நிலைத்து விட்டது.
அட்சய திரிதியையான இன்று (28) ஹட்டன் நகரில் பெரும்பாலான இடங்களில் அதிகாலையிலேயே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

No comments:

Powered by Blogger.