Header Ads

Header Ads

பிரித்தானியாவில் பலரை வெறித்தனமாக கடித்த நாய்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிசார்



பிரித்தானியாவில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரண்டிற்கும் மேற்பட்ட நாய்கள் அவர்களை வெறித்தனமாக கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரின் பகுதியில் உள்ள போல்டன் என்ற இடத்தில் பொதுமக்கள் பலர் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று அங்கிருந்த சில நாய்கள் அவர்களை கடித்துள்ளது.
இதனால் பொலிசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், நாயை கட்டுப்படுத்த முயற்ச்சி செய்தும் பலன் அளிக்காததால் இரண்டு நாய்களை அந்த இடத்திலே தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து சுட்டுள்ளனர்.


இது குறித்து பொலிசார் கூறுகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்காவே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இதில் இரண்டு நாய்களை சுட்டுத்தள்ளிவிட்டதாகவும், ஒரு நாய் தப்பித்துச் சென்றுவிட்டதாகவும், இதனால் பொதுஇடத்தில் குறித்த நாயை பார்த்தால், அருகில் செல்ல வேண்டாம் என்றும் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கும் படி தெரிவித்துள்ளனர்.
நாய் கடித்ததில் 60 வயது பெண் ஒருவருக்கு அதிக அளவு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.