Header Ads

Header Ads

யாழ் கந்தர்மடத்தில் யுவதியின் திருவிளையாடல்!! £1000 அபேஸான கதை



லண்டனில் இருந்து யாழ் சென்ற நபர் ஒருவரிடம் 1,000 பவுண்ஸை ஆட்டையைப் போட்டுள்ளார் ஒரு யுதவி. இவர் யார் எவர் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. லண்டனில் இருந்து காரை நகரை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவர் யாழ் சென்றுள்ளார். அவரிடம் காரை நகரை சேர்ந்த சிலர் 1,000 பவுன்ஸை கொடுத்து விட்டுள்ளார்கள். (ஊரில் உள்ள சில உறவுகளுக்கு கொடுத்து உதவுமாறு).

இன் நபர் காசை கொண்டு போய் தனது தாயாரிடம் கொடுத்துவிட்டு. வெளியே சென்றவேளை. சிறிது நேரத்தில் அங்கே வந்த பெண் ஒருவர் உங்களிடம் காரை நகர் ஆட்களுக்கு கொடுக்கச் சொல்லி பணம் அனுப்பப்பட்டுள்ளதே. அதனை பெற்றுச் செல்ல வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய தாயார் 2 லட்சம் ரூபாவை(1,000 பவுன்ஸை) கொடுத்துவிட்டார்.

ஆனால் சிறிது நேரம் கழித்து சிலர் காரை நகரில் இருந்து வந்து பணம் கேட்டுள்ளார்கள். இவர்களே உண்மையான நபர்கள் எனவும். முன்னர் வந்து பணத்தை வாங்கிச் சென்ற பெண் பெரும் ஏமாற்றுகாரி என்பது லண்டனில் இருந்து சென்றவருக்கு பெரும் அதிர்சியைக் கொடுத்துள்ளது. பணம் வரும் விடையம். அது எங்கே வருகிறது ? இது போன்ற நுட்ப்பமான விடையங்களை அவர் எவ்வாறு அறிந்தார் ? எப்படி ஆட்டையைப் போட்டார் என்பது மர்மாகவே உள்ளது. அருகில் உள்ள கடை ஒன்றின் CCTV கமராவை போட்டு பார்த்ததில் அப்பெண்ணின் உருவம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது என்கிறார்கள். 

No comments:

Powered by Blogger.