Header Ads

Header Ads

தினம் ஒரு ஆணுடன் உறவு: அதிர்ச்சி ஏற்படுத்தும் கலாசாரம்

கம்போடியாவில் இளம் வயது பெண்கள் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்களை தேடும் கலாசார முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகம் பல்வேறு தொழில்நுட்ப துறைகளில் முன்னேறி வந்தாலும், ஒரு சில இடங்களில் வாழும் பழங்குடியின மக்கள் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கை முறையினையே பின்பற்றி வருகின்றனர்.
அதுவும், இவர்கள் பின்பற்றும் சில கலாசார முறைகள் விநோதத்தை ஏற்படுத்துகின்றன.
அதற்கு எடுத்துக்காட்டு கம்போடியாவில் ரத்னகிரி எனும் இடத்தில் வாழும் கிரௌன் எனப்படும் பழங்குடியின மக்கள் ஆவார்.
இந்த இனத்தை சேர்ந்த இளம் வயது பெண்களுக்கு அவர்களது தந்தை காதல் குடிசை ஒன்றை கட்டிக்கொடுப்பார். பெண்கள் பருவ வயதை எட்டும்போது அந்த குடிசைக்குள் குடிபெயர்ந்துவிட வேண்டும்.
அதாவது, அந்த குடிசையில் இருந்தவாறு தங்களது வாழ்க்கை துணையை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு தினம் ஒரு ஆணுடன் உறவு கொள்வார்கள், இதில் அவர்களை எந்த ஆண் திருப்திபடுத்துகிறானோ அவனையே வாழ்க்கை துணையாக தெரிவு செய்கிறார்கள்.
தனக்கு அந்த ஆணுடன் திருப்தி ஏற்படவில்லை எனில், மறுநாள் வேறு ஆணுடன் இரவை அந்த பெண் கழிக்க வேண்டும். திருப்திபடுத்தாத ஆண், மீண்டும் அந்த பெண்ணுடன் தங்க அனுமதி இல்லை.
இந்த வழக்கமானது பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பரவலாகவே இந்த நாட்டில் இருக்கிறது.
மேலும், பாலியல் கடத்தல் சம்பவங்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபடுவதும், இளைஞர்களை பாலியல் உறவு கொள்ளுமாறு ஊக்குவிக்கும் யோசனை மிகவும் வெளிப்படையாகவே உள்ளது என பெண்கள் உரிமை அமைப்பினர் குரல் கொடுத்தாலும், இது அந்த மக்களின் கலாசாரம் என்பதால் அந்நாட்டு அரசால் தலையிட முடியாமல் இன்றுவரை அந்த முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Powered by Blogger.