Header Ads

Header Ads

இளவரசி கேட்டின் நிர்வாணப்படம்! பக்கிங்ஹாம் அரண்மனை கேட்கும் நஷ்டஈடு தொகை எவ்வளவு தெரியுமா?

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனின் அரை நிர்வாணப்படத்தை குளோசர் பத்திரிக்கை வெளியிட்ட வழக்கில் 1.3 மில்லியன் பவுண்டு நஷ்டஈடு கோரி அரச குடும்பம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு பிரான்ஸ் மாளிகையில் பிரித்தானியா இளவரசி கேட் தனது கணவர் வில்லியம்முடன் மேலாடையின்றி நின்றுள்ளார். இதனை ரகசியமாக புகைப்படம் எடுத்து, பிரான்ஸ் நாட்டின் 'குளோசர்' பத்திரிகை வெளியிட்டுவிட்டது.
பிரான்ஸ் நாட்டில் சம்பவம் குறித்து, குளோசர் பத்திரிக்கையுடன் தொடர்புடைய ஆறு பேர் மீது தனியுரிமை மற்றும் உடந்தையாக இருந்தனர் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் தொடங்கியது. இதன் போது Cyril Moreau, Dominique Jacovides and Valerie Suau ஆகியோர் இளவரசியை புகைப்படம் எடுத்து பத்திரிகைக்கு விற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், Jacovides மற்றும் Suau குற்றத்தை மறுத்துள்ளனர்.
இந்நிலையில் பத்திரிகை சங்கம், அரச குடும்பத்தின் தனியுரிமையை மீற வேண்டும் என்பது Suau-ன் நோக்கம் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.
இந்ந வழக்கின் விசாரணை முடிந்து யூலை 4ம் திகதி நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கும் என பத்திரிகை சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Powered by Blogger.