Header Ads

Header Ads

ஐ.எஸ் டாப் லெவல் தளபதி அதிரடிப்படை தாக்குதலில் சுட்டுக் கொலை !

ஆக்பானிஸ்தானில் அன் நாட்டுக்கு பொறுப்பான ஐ.எஸ் தளபதி, அப்துல் ஹஸ்பி நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக அன் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். அக்பானிஸ்தான் நாட்டு அதிரடிப்படையினர் நடத்திய பெரும் தாக்குதல் ஒன்றில், அவர் கொல்லப்பட்டுள்ளார். நங்ககார் என்னும் மாநிலத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோட்டை ஒன்று இருந்து வந்தது.

குறித்த தளத்திற்கு எந்த ஒரு ராணுவமும் செல்ல முடியாதபடி, பெரும் பாதுகாப்பு இருந்தது. இதனை ஐ.எஸ் அமைப்பே வடிவமைத்து இருந்தது. மலைகளுடன் கூடிய பகுதி என்பதனால் அக்பானிஸ்தான் ராணுவம் அங்கே சென்றால் கடும் அழிவை சந்திக்க நேரிடும் என்ற நிலை இதுவரை காலமும் இருந்து வந்தது.

ஆனால் அன் நாட்டின் சிறப்பு அதிரடிப்படையினர், திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தி அந்த தளத்தை தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளார்கள். இதில் நடந்த கடும் சமரில் தான் ஐ.எஸ் தளபதி அப்துல் ஹஸ்பி கொல்லப்பட்டுள்ளார் என மேலும் அறியப்படுகிறது. 

No comments:

Powered by Blogger.