Header Ads

Header Ads

பளை துப்பாக்கி பிரயோகம்; இன்றும் தொடர்கின்றது தேடுதல்

கிளிநொச்சி – பளை, கச்சார்வெளி பகுதியில் போக்குவரத்து பொலிஸாரை இலக்கு வைத்து அடையாளந் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்றும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
முகமாலை பகுதியை அண்மித்த கச்சார்வெளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 12.30 அளவில் ஏ -9 வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸாரை இலக்கு வைத்து அடையாளந் தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கச்சார்வெளி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாட்டம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியை நோக்கி பொலிஸார் வெளிச்சம் பாய்ச்சியதையடுத்து, பொலிஸாரை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது போக்குவரத்து பொலிஸாரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும் இதன்போது எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Powered by Blogger.