Header Ads

Header Ads

மாமனார் சொல்லை தட்டினாரா தனுஸ் ? நடந்தது என்ன! இருவருக்குள் ஏதும் மாஸ்டர் பிளானா ?

மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன சொல்லைத் தட்டாமல், அப்படியே நடந்துகொள்ள முடிவெடுத்துள்ளாராம் மருமகன் நடிகர் தனுஷ். நடிகராகத் திகழ்ந்தாலும், இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் தனுஷின் பல வருட கனவு. 


அதற்காக, 17 குறும்படங்களை இயக்கி ட்ரையல் பார்த்த தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். எனவே, அவர் வருடத்துக்கு ஒரு படமாவது இயக்க வேண்டும் என பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கெளதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்களும் அதில் அடக்கம். ஆனால், தனுஷின் மாமனாரான ரஜினிகாந்த், ‘இந்த ஒரு படம் போதும், 


பல வருடங்களுக்கு சிறந்த இயக்குநராக மக்கள் உங்களைக் கொண்டாடுவார்கள். அடுத்தடுத்து படம் இயக்கி, இந்தப் பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார். தனுஷுக்கும் அதுதான் சரியெனப் படுகிறதாம். அடுத்த படமும் இதைப்போல வெயிட்டாக இருக்க வேண்டும் என்பதால், டைம் எடுத்து கதையைத் தயார் செய்யப் போகிறாராம். எனவே, தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார் தனுஷ்.

No comments:

Powered by Blogger.