Header Ads

Header Ads

அண்ணன், தங்கைக்குள் ஏற்பட்ட காதல்: நேர்ந்த விபரீதம்

முறை தவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னரங்கன். இவர் மனைவி மசணி. இவர்களின் மகன் மாதேஷ் (25) அதே பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவர் மனைவி மாஸ்தி. இவர்களின் மகள் சுமித்ரா (20)மசணியும், மாஸ்தியும் அக்கா–தங்கை ஆவர்கள். இந்நிலையில் மாதேஷ் மற்றும் சுமித்ரா இடையில் காதல் மலர்ந்துள்ளது.

மாதேசும், சுமித்ராவும் அண்ணன்–தங்கை முறையாவதால் இருவரின் பெற்றோர்களும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரும் நான்கு வருடத்துக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் தங்கள் பெற்றோரை பார்க்க வந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஏற்று கொள்ளவில்லை.
4 ஆண்டுகள் கழித்து வந்தும் தங்களை பெற்றோர்கள் ஏற்கவில்லையே என 2 பேரும் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்தனர்.
அதன்படி, ஒரு மரத்தில் மாதேசும், சுமித்ராவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பின்னர் சடலங்களை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்

No comments:

Powered by Blogger.