Header Ads

Header Ads

நண்பரை 200 சிறு துண்டுகளாக வெட்டிய கொடூரம்

மும்பையில் நண்பரை 200 சிறு துண்டுகளாக வெட்டி, கழிப்பிடத்தில் போட்டு மறைத்த நிலையில், கழிப்பறைக் குழாய் அடைப்பை நீக்கும்போது, உடல் பாகங்கள் வெளியேறியதால் கொலை செய்த நபர் சிக்கினார். மும்பை நயாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் விதால் கோல்காத்கர் (58). இவருடைய நண்பர் பின்டூ சர்மா (வயது45). விரார் பகுதியில் உள்ள விரார் பச்சாராஜ் அடுக்குமாடிக் குடியிருப்பில் சர்மா வசித்து வருகிறார். இந்நிலையில், கோல்காத்கர் வயதான நிலையில் திருமணம் செய்துள்ளார்.
அந்தத் திருமணத்துக்காக தனது நண்பர் சர்மாவிடம் ரூ. ஒரு லட்சம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடனில் ரூ.40 ஆயிரத்தை கணேஷ் விதால் கோல்காத்கர் திருப்பிச் செலுத்தியுள்ளார். மீதப் பணத்தை சர்மாவுக்கு திருப்பி அளிக்கவில்லை. இந்நிலையில், கணேஷ் விதால் கோல்காத்கரைக் காணவில்லை என்று கடந்த 16-ம் தேதி அவரின் குடும்பத்தினர் நயாநகர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் கணேஷைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், விரார் பகுதியில் சர்மா வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் உள்ள கழிப்பிடக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வந்துள்ளது. இதையடுத்து, இன்று மாநகராட்சி சார்பில் பணியாளர்கள், எந்திரம் வரவழைக்கப்பட்டு அடைப்பு எடுக்க முயன்றனர்.
அப்போது, குழாய் பகுதியில் இருந்து மனித உடல் பாகங்கள், கை, கால்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையிலும், காது, குடல் பகுதிகள் சிறு துண்டுகளாகவும் வெளிவந்தன. இதைக் கண்ட குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீஸார் உடல் பாகங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அந்த விசாரணையில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கணேஷ் உடையது என்பதும், அவரைக் கொலை செய்தது சர்மா என்பதையும் போலீஸார் கண்டுபிடித்து சர்மாவைக் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் ஆய்வாளர் ஜெயந்த் பாஜ்வாலே கூறியதாவது:
கடந்த 16-ம் தேதி விரார் பகுதியில் உள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிக்குச் சர்மாவை சந்திக்க கணேஷ் வந்துள்ளார். அப்போது, கணேஷ் தன்னிடம் வாங்கிய கடனை சர்மா திருப்பிக் கேட்டுள்ளார்.அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், கணேஷை சுவரில் தள்ளிவிட்டுள்ளார் சர்மா. சுவரில் மோதிய வேகத்தில் கணேஷ் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இதை வெளியே சொல்லப் பயந்து சர்மா, மரம் அறுக்கும் கத்தியை வாங்கி வந்து கணேஷின் உடலை 200க்கும் மேற்பட்ட சிறு துண்டுகளாக வெட்டியுள்ளார். வெட்டிய பாகங்களை வீட்டில் உள்ள கழிப்பிடத்தில் போட்டு வெளியேற்றியுள்ளார். ஏறக்குறைய 4 நாட்களாக உடலைச் சிறு துண்டுகளாக வெட்டியுள்ளார்.
எலும்புகளை பிளாஸ்டிக் பையில் சுற்றி குப்பையில் எறிந்துள்ளார். சதைப் பகுதிகளையும், உடல் பாகங்களையும் கழிப்பிடத்தில் போட்டு தண்ணீர்விட்டு அகற்ற முயன்றுள்ளார்.ஆனால், உடல் பாகங்கள் கழிப்பறைக் குழாயில் சென்று அடைத்துக்கொண்டு தண்ணீர் செல்லாமல் இருந்தது. இதையடுத்து, துப்புரவுப் பணியாளர்கள் மூலம் அடைப்பைச் சரி செய்தபோது மனித உடல் பாகங்கள் வெளியேறியதையடுத்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, எங்களுக்குத் தகவல் கிடைத்து இங்கு வந்துவிசாரணை நடத்தினோம். அப்போது, அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்தபோது, 602-ம் எண் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, அந்த வீட்டை ஆய்வு செய்தபோது ரத்தக்கறை இருந்ததைக் கண்டுபிடித்து அந்த வீட்டின் உரிமையாளர் சர்மாவைக் கைது செய்தோம். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது”.

No comments:

Powered by Blogger.