Header Ads

Header Ads

தமிழர் வீடுகளுக்குள் புகுந்து மோசடியில் ஈடுபட்டுவந்த சிங்களவர்களை நையப்புடைத்த தமிழ் மக்கள்!

தமிழ் மக்களின் வீடுகளிற்கு சென்று பணம் வசூலித்த அனுராதபுர சிங்கள இளைஞர்கள் நால்வரை மடுவில் உள்ள மக்கள் நையப்புடைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது,
சம்பவம் தொடர்பில் மேலும்.,
மன்னார், மடு, பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று அநாதை குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக கூறி, சில தமிழ் மக்களை மிரட்டியும் நிதி வசூலித்த அனுராதபுரம் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட சிங்கள இளைஞர்கள் நால்வரை சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் துரத்தி பிடித்து இன்று (7) நையப்புடைத்துள்ளனர்.
சம்பவத்தை அறிந்து சம்பவவிடத்துக்குச்சென்ற அப்பகுதி கிராம நிலதாரி நடந்த சம்பவத்தை கேட்டறிந்ததுடன், மடு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸார் அவர்களை காப்பாற்றும் விதமாக செயற்பட்டதுடன் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.