Header Ads

Header Ads

வீட்டில் அமர்ந்தபடியே போப் ஆண்டவருடன் பிரார்த்தனை செய்ய புதிய ‘செயலி

வீட்டில் அமர்ந்தபடியே போப் ஆண்டவருடன் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன்சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று பிரார்த்தனை நடத்தினார். அதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
22அப்போது பிரார்த்தனைக்காக ‘டேப்லெட்’டில் ‘கிளிக் டூ பிரே’ என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார். பின்னர் உலக அமைதி மற்றும் இயற்கை பேரிடரில் இருந்து மக்களை காப்பாற்றவும் பிரார்த்தனை செய்தார்.
இந்த செயலி மூலம் வீட்டில் அமர்ந்தபடியே போப் ஆண்டவருடன் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட முடியும். இந்த செயலியை தொடங்கி வைக்கும் முன்பு போப் ஆண்டவர் பேசினார்.
அப்போது “எனது மனதில் 2 வலிகள் ஏற்பட்டுள்ளன. அது கொலம்பியா மற்றும் மத்திய தரைக்கடல் பிரச்சினைகளாகும். லிபியா மற்றும் மொரர்கோ நாடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் பிழைப்பு தேடி அகதிகளாக தஞ்சம் பிழைக்க படகில் சென்றபோது மத்திய தரைக்கடலில் மூழ்கினர். அவர்களில் 170 பேர் உயிரிழந்தனர்.
அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். கொலம்பியாவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். அவர்களுக்காகவும், உலகில் அமைதி நிலவவும் பிரார்த்தனை செய்வோம்” என்றார்.
இதற்கிடையே வாடிகன் நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் (https://www.clicktopray.org/en/user/popefrancis) என்ற இணைய தள முகவரியில் தொடர்பு கொண்டால் போப் ஆண்டவருடன் பிரார்த்தனையில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.