Header Ads

Header Ads

வடக்கு மக்களிற்கு மைத்திரியால் வழங்கப்பட்ட மகிழ்ச்சியான செய்தி

வடக்கில் பாதுகாப்பு மற்றும் தனியார் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 1201 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுவிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வசமிருந்த பொதுமக்களுக்கு சொந்தமான 44.6 ஏக்கர் காணி நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 119.79 ஏக்கர் காணி நிலப்பரப்பும், கிளிநொச்சியில் 485 ஏக்கர் காணி நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர மன்னார் மாவட்டத்தில் 504.5 ஏக்கர் காணி நிலப்பரப்பும், வவுனியாவில் 54.38 ஹெக்டயார் காணி நிலப்பரப்பும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

No comments:

Powered by Blogger.