Header Ads

Header Ads

யாழில் கிராமம் ஒன்றை தத்தெடுத்த இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அரியாலை கிழக்கு பிரதேசம், இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்காகத் தத்தெடுக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, ஒழுக்கம், போதை பொருள் , பல தார மணம், பாலியல் ஒழுக்க கேடுகள், வன்முறைகள், குற்ற செயல்கள் என பல தரப்பட்ட பிரச்சினைகளை இந்தப் பிரதேச மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கைவிட்டுள்ள நிலையில், இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்காக இந்தப் பிரதேசம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி இப்பிரதேசத்துக்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.

மக்களின் வறுமையை ஒழித்தல், வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், கல்வி, சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்துதல், இளையோர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், வன்முறைகள், குற்ற செயல்கள் ஆகியவற்றைக் குறைத்தல், அறிவூட்டல்கள், விழிப்பூட்டல் ஆகிய செயல் திட்டங்கள் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கமைவாக 130 பேருக்கு உலர் உணவுப் பொதிகள், 50 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.

தெற்கைச் சேர்ந்த தமிழ் – சிங்கள மனித நேய செயற்பாட்டாளர்கள் இதற்கான உதவிகளை வழங்கினர்

No comments:

Powered by Blogger.