Header Ads

Header Ads

யாழில் வசமாக சிக்கிய மதபோதகர்! என்ன செய்தார் தெரியுமா?

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் அமைந்துள்ள ஆலயத்தில் போதகராக கடமையாற்றும் (கத்தோலிக்கம் அல்லாத) ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த போதகர் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை கனடாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவரிடம் இருந்து 45 இலட்சம் ரூபா பணம் வேண்டும் என கோரியுள்ளார். 

அதன்படி முதல்கட்டமாக 35 லட்சம் ரூபாவை வழங்குமாறு போதகர் கேட்டுள்ளார். அதன்படி, முதல் கட்ட தொகை போதகரின் வங்கியில் சம்பந்தப்பட்ட நபரால் வைப்பிலிடப்பட்டுள்ளது. வங்கியில் பணம் வைப்புச் செய்து ஒரு வருட காலமாகியும் கனடாவுக்கு அனுப்பிவைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் போதகர் செய்யவில்லை. 

அதனால் பணத்தை வைப்பிலிட்ட நபர், வங்கியில் வைப்புச் செய்த சிட்டையை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு காவற்துறைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத் தடுப்பு பொலிஸார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர். சந்தேகநபரான போதகர் 35 லட்சம் ரூபா நிதியை மோசடி செய்துள்ளார்.

No comments:

Powered by Blogger.