Header Ads

Header Ads

இளைஞனுடன் சென்ற மாணவியை சீரழித்த மர்ம கும்பல்

நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் மர்மான முறையில் இறந்து கிடந்ததால், அவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் Godavari மாவட்டத்தில் இருக்கும் Guntupalli பகுதியில் இருக்கும் குகைக்கு அருகே இளம் பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மான முறையில் இறந்துகிடப்பதாகவும், இளைஞன் காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார், 

அந்த இளைஞனை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, பெண்ணின் உடலை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அதன் பின் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இறந்த பெண்ணின் பெயர் Sri Dharani எனவும் 18 வயதான இவர் Unguturu Mandal பகுதியில் இருக்கும் MM Puram-ஐ சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் Polasanipalli பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் BSc முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளைஞனின், பெயர் Douluri Naveen எனவும், இவர் Bheemili Mandal பகுதியில் இருக்கும் 

Arjavari Gudem கிராமத்தைச் சேர்ந்தவர் என விசாரணையில் பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஜோடி நேற்று காலை இரு சக்கர வாகனத்தில் காலை உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு அங்கிருக்கும் புத்த நினைவுச் சின்னங்களை சுற்றி பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு இடையில் மாணவி மற்றும் இளைஞன் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதால், மாணவி மர்மகும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அத்தோடு மேலதிக தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.