Header Ads

Header Ads

கொரோனா வைரஸ்: இந்தியாவில் 1,071, தமிழகத்தில் 67 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளதால், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50ல் இருந்து 67ஆக அதிகரித்துள்ளது என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நிலம் முழுவதும் கொரோனா அறிகுறி உள்ளவர்களின் 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது என்றும் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் இரண்டாவது கட்டத்திலிருந்து மூன்றாவது கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறன என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தற்போதுவரை கண்டுபிடிக்கப்படாததால், பொது மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ''கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தற்போதுவரை இல்லை. மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது மட்டுமே தற்போது நம்மிடம் உள்ள தடுப்பு மருந்து,'' என்றார்.வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்களின் பிரச்னையை களைய ஆலோசனை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
சுகாதார பணியாளர்கள் குறித்து பேசிய முதல்வர்,1.5கோடி முகக்கவசங்கள், மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக 25 லட்சம் என்95(N 95) முகக்கவசங்கள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிபுரியும்போது அணியவேண்டிய பாதுகாப்பு உடைகள் போன்றவற்றை வாங்கவுள்ளது என்றும் தெரிவித்தார். அதோடு கொரோனா பரிசோதனைக்காக 1,000 கருவிகளும் வாங்கப்படும் என்றார்.

No comments:

Powered by Blogger.