Header Ads

Header Ads

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நிலைமை - கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒரு இலங்கையர் சுவிஸர்லாந்தில் கடந்த 25ஆம் தேதி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரே சுவிஸர்லாந்தில் உயிரிழந்தமையை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், இத்தாலியிலுள்ள இலங்கையர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதுடன், அவர் சிகிச்சைகளின் பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்று முன்தினம் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவந்தி பெல்பிட்டியவை தொடர்புக் கொண்டு வினவியது.
பிரித்தானியாவின் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்தமையை அந்த நாட்டுக்கான தூதரகம் உறுதிப்படுத்தியதாக கூறிய அவர், மரணத்திற்கான காரணம் இதுவரை மருத்துவ அறிக்கைகளின் ஊடாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
அந்த நாட்டு மருத்துவமனைகளினால் மருத்துவ அறிக்கைகள் கிடைத்ததன் பின்னரே உயிரிழப்பிற்கான காரணத்தை கூற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Powered by Blogger.