Header Ads

Header Ads

சீனாவுக்கு அடுத்த தலைவலி; வெடிக்கும் கலவரம்!

சீனாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்துதான் இந்த நோய் பரவத் தொடங்கியது. ஒருகட்டத்தில் வைரஸ் தீவிரமாக பரவி, மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். அதன்பின்னர் ஊரடங்கு உத்தரவு மற்றும் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொரோனா வைரசை கட்டுப்படுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸின் மையமாக திகழ்ந்த ஹூபே மாகாணத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் 2 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாடத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஹூபே மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக வெளியேற முயற்சி செய்வதால் புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
போலீசார் தடுப்பதால் வன்முறை வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, சாலைகளை திறந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி மக்கள் வலியுறுத்துவதால் பிரச்சனை வெடித்துள்ளது.
உள்ளூர் ஊடக அறிக்கையின்படி, ஹுபாய் மற்றும் அண்டை நாடான ஜியாங்சி மாகாணத்தை இணைக்கும் பாலத்தில் வெள்ளிக்கிழமை காலை மோதல் தொடங்கியது என சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
மோதலின் இருபுறமும் உள்ள இரு மாவட்டங்களும் சனிக்கிழமை ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன, அவற்றுக்கிடையேயான சோதனைச் சாவடிகள் அகற்றப்படும் என்றும் கடக்க சிறப்பு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்றும் கூறி உள்ளன.
தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களின் விரக்தியையும், சமூகங்களில் மீண்டும் ஒன்றிணையும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளையும் இந்த பதற்றங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
சனிக்கிழமையன்று, அரசு நடத்தும் பீப்பிள்ஸ் டெய்லி மோதலில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரை கூறும் ஒரு செய்தியை வெளியிட்டது, ஹூபே பூர்வீகவாசிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தல் அல்லது தனிமைப்படுத்துவது “அவர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது” என்று கூறி உள்ளது.
“ஹூபே மக்கள் வேலைக்குத் திரும்பும்போது நாம் அவர்களுடன் நல்லுறவைக் காட்ட வேண்டும்” என்று கட்டுரை கூறியது. “காரணம் எளிது – அவர்கள் நமது தோழர்கள்.” என கூறி உள்ளது.

No comments:

Powered by Blogger.