Header Ads

Header Ads

கொரோனா வைரஸ்: 15 லட்சத்தை கடந்தது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சம் பேரைக் கடந்தது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ்பல்கலைக்கழகத் தகவலின்படி இதுவரை கிட்டத்தட்ட 90000 பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் 3,37,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் 4,32,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக்கொண்ட நாடு அமெரிக்கா. அதன்பின் ஸ்பெயின். இத்தாலி மற்றும் ஜெர்மனி அதற்கு அடுத்த இடங்களில்உள்ளன.
இத்தாலியில்17000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதுவே அதிகப்படியாக உயிரிழந்தவர்களைக் கொண்டநாடு. அதற்கு அடுத்த இடத்தில் 15,000 பேர் ஸ்பெயினில் உயிரிழந்துள்ளனர். ஃபிரான்ஸில்உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொட்டது.

No comments:

Powered by Blogger.