இரானில் ஒரே நாளில் 1600 பேருக்கு கொரோனா பாதிப்பு
இரானில் ஒரே நாளில் புதிதாக 1,606 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கினஷ் ஜஹான்புர் தெரிவித்தார்.
இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 78,000ஆக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடான இரானில் நேற்று ஒரே நாளில் 92 பேர் உயிரிழக்க, அங்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 4,869ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், அதிகாரப்பூர்வ தரவுகளைவிட அங்கு அதிகம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
No comments: