Header Ads

Header Ads

பிரிட்டன் சவக்குழியாக மாறுகிறது: நேற்று மட்டும் 563 பேர் உயிர் இழந்தார்கள்: கடும் அதிர்ச்சி

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பிரித்தானிய அரசு திண்டாடி வருகிறது. நேற்றைய தினம் மட்டும் 563 பேர் இறந்துள்ளதாக அறியப்படுகிறது. இது 3 மடங்காக அதிர்கரித்துள்ளது. இனி வரும் நாட்களில் இது ஒரு நாளைக்கு 1,000 பேர் என்ற ரீதியில் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. இது போக கொரோனா வைரஸ் தொற்று, ஒரு நாளைக்கு 3,000 பேருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுக் கொண்டு வருகிறது. இதனை தொற்று என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அதாவது மருத்துவப் பரிசோதனை செய்து கண்டு பிடிக்கும் எண்ணிக்கை தான் இந்த 3,000.
ஆனால் ஏற்கனவே பல ஆயிரக் கணக்கானவர்களுக்கு. ஏன் லட்சக் கணக்கான மக்களுக்கு கூட இந்த தொற்று இருக்கலாம். எனவே தமிழர்களே இதனை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம் மிகக் கடுமையாக இது தொற்றி வருகிறது. இறப்பு விகிதம் மிக மிக அதிகமாக உள்ளது. பிரித்தானியா ஒரு சவக்குழியாக மாறி வருகிறது. எனவே அனைவரும் வீட்டில் இருந்தால் தவிர. இந்த தொற்றை கட்டுப்படுத்துவது என்பது மிக மிக சிரமமாகும்.

No comments:

Powered by Blogger.