Header Ads

Header Ads

ரஷ்யாவில் ஈஸ்டர் அன்று சிலுவையை முத்தமிட்டு 6,060 பேருக்கு கொரோனா பரவியது

இதுவரை காலமும் ரஷ்யா போன்ற சில நாடுகளில் மட்டும் தான் கொரோனா மிக குறைவாக பரவி வருகிறது என்ற பேச்சு அடிபட்டு வந்த நிலையில். கடந்த ஞாயிறு அன்று ரஷ்யாவில் இடம்பெற்ற கிறீஸ்தவ ஆராதனைகள், மற்றும் கிறீஸ்தவ கடும் போக்காளர்களது ஒன்று கூடல் காரணமாக, அங்கே நோய் தொற்று தற்போது ஒரு நாளைக்கு 6,050 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. So much for social distancing! Orthodox Christians defy lockdown to go to Easter services – including Putin who visited private chapel – as Russia’s daily infection rate soars to 6,060
இத்தனை உலக நாடுகளையும் பார்த்து கூட இவர்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் எப்படி என்ற கேள்விகள் எழுகிறது. ரஷ்யாவில் பல இடங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்றுகூடி ஈஸ்டர் தினத்தை கொண்டாடியது போதாது என்று. சிலுவையை முத்தமிட்டுள்ளார்கள். இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் நேற்றில் இருந்து தொற்று எண்ணிக்கை ஒரு நாளைக்கு 6,000 ஆயிரத்தை தொட்டுள்ளது.
வழமையாக 300 தொடக்கம் 425 பேருக்கே இதுவரை காலம் தொற்றி வந்தது. ஆனால் இது தற்போது பன்மடங்காக அதிகரித்துவிட்டது. இப்படி தான் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் நேரத்தில் தான் இத்தாலியில் மிக முக்கியமான ஒரு உதைபந்தாட்ட போட்டியை நடத்தி, அங்கே 30,000 ஆயிரம் இளைஞர்கள் கூடினார்கள். அந்த ஒரு நாள் கூட்டம் தான், இன்று இத்தாலி இந்த அளவு பாதிக்க காரணமாக அமைந்தது என்பதனை அன் நாட்டு அரசே ஒத்துக் கொள்ளும் நிலையில்.
ரஷ்யா இப்படி நடந்து கொண்டது பெரும் ஆபத்தில் தற்போது முடிந்துள்ளது.

No comments:

Powered by Blogger.