Header Ads

Header Ads

கொரோனாவிலிருந்து மீண்ட 91 பேருக்கு மீண்டும் நோய்த்தொற்று

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்ட 96 பேருக்கு மீண்டும் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நோய் தாக்கத்திலிருந்து மீண்ட இவர்களுக்கு எப்படி இரண்டாவது முறையாக வைரஸ் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என்று தென்கொரியாவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் என்று கூறுவதைவிட ஏற்கனவே ஏற்பட்டிருந்த நோய்தொற்று மீண்டும் செயல்பட தொடங்கி இருக்கலாம் என்று தென்கொரிய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் உடலில் இருந்த நோய்த்தொற்று மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கலாம் அல்லது தவறான பரிசோதனையின் காரணமாக இவர்கள் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டதாக தவறான முடிவு கிடைத்திருக்கலாம் என்று வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஒரு முறை கோவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட ஒருவருக்கு அந்த நோய்த்தொற்றை எதிர்க்க வல்ல நோய் தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டுவிடும் என்று மருத்துவத்துறை வல்லுநர்கள் நம்பி வரும் சூழ்நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

No comments:

Powered by Blogger.