இலங்கை நாசமாகப் போகிறது ? ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொரோனா பரவல் அதிகரிக்கும்
இலங்கையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், திறந்து விட்ட மந்தைகளை போல மக்கள் திரண்டு பல இடங்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் பல இளைஞர்கள் பல்பொருள் அங்காடி செல்லாமல், மதுபான கடைகளுக்குச் சென்று. தம்மால் எவ்வளவு குடிவகைகளை வாங்கி கையிருப்பில் வைக்க முடியும் என்று பணத்தை வாரி இறைக்கிறார்கள். குடித்தால் மனித உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறையும் என்பது கூட இவர்களுக்கு புரியவில்லை.
இது இவ்வாறு இருக்க கொழும்பு தொடக்கம் யாழ் வரை அனைத்து பகுதிகளிலும் வழமைக்கு அதிகமாக மக்கள் நடமாட ஆரம்பித்து விட்டார்கள். இதனால் கொரோனா தொற்று பன் மடங்காக அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என புத்திஜீவிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள். இதன் பலனை இன்னும் சில வாரங்களில் இலங்கை அனுபவிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
No comments: