ஈழத்தில் வெடிபொருட்கள் மீட்பு மீண்டும் விடுதலைப்புலிகளா?
![](https://1.bp.blogspot.com/-A7z76y6lQNU/XD3_Q5yOuOI/AAAAAAAAALw/TPBOkTD8wrgxrATAdrnHhBJS8iY8V06HwCLcBGAs/s1600/vavuniyaa-300x200.jpg)
சம்பவம் தொடர்பாக தெரிவித்த போலிசார்….
கடந்த ஒருவாரத்திற்கு முன்பாக வவுனியா மடுக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார்.
பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சிறுவன் ஒருவன் விளையாட சென்றநிலையில் உரப்பொதியில் சுற்றிவைக்கபட்டு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து தனது தந்தைக்கு தெரியபடுத்தி உள்ளான்.
பின்னர் குறித்த விடயம் பூவரசங்குளம் போலிசாருக்கு தெரியபடுத்தபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் குறித்த உரப்பொதியை சோதனை செய்து பார்த்தபோது மூன்று கைக்குண்டுகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தபடும் ரவைகள், கோல்சர் என்பவற்றை அவதானித்ததாக தெரிவித்தனர்.
எனினும் மண்ணில் புதையுண்டு கிடப்பதால் மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல்தெரிவித்தனர்.
நீதி மன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த கிராமத்தில் இருந்து அண்மையிலும் வெடிபொருட்கள் மீட்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: