Header Ads

Header Ads

மைத்திரியின் மரணத்தை கூறிய ஜோதிடரின் தற்போதைய நிலமை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என கூறி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக விஜித ரோஹன விஜயமுனிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது சந்தேகநபருக்கு எதிராக அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனையை கவனத்தில் கொண்டு, நீதவான் சந்தேக நபரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். 

 ஜனாதிபதி 2017ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி உயிரிழப்பார் என விஜித ரோஹன விஜயமுனி எதிர்வுகூறியிருந்தார். இதனையடுத்து ஜனாதிபதி வேறு ஒரு தினத்தில் இறப்பார் என மீண்டும் இணையத்தளத்தில் பிரச்சாரம் செய்தார் என பொலிஸார் குற்றம் சுமத்தியிருந்தனர். முன்னாள் கடற்படை சிப்பாயான விஜித ரோஹன விஜயமுனி தற்போது தன்னை ஜோதிடராக அறிவித்து, எதிர்வுகூறல்களை மேற்கொண்டு வருகிறார்.

No comments:

Powered by Blogger.