Header Ads

Header Ads

மனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..


யாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது. ஆனால் விடுதலைப் புலிகள் மனிதநேய அடிப்படையில் தான் முஸ்லீம்களை யாழ் மண்ணில் இருந்து அனுப்பி வைத்தார்கள். அன்று என்ன நடந்தது தெரியுமா ?
யாழ் செம்மா தெருவில் அமைந்துள்ள ஒஸ்மானியா கல்லூரிக்கு பின்னால், விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்தது. அங்கே சங்கிலியன் என்னும் போராளி ஒருவர் முஸ்லீம் வீடு ஒன்றில் வழமைக்கு மாறகாக சிலர் வந்து செல்வதை கண்டு சந்தேகமுற்றார். அவர் சென்று குறித்த வீட்டில் உள்ளவர்களை விசாரணைக்கு உட்படுத்தியவேளை அவர்கள் பெரும் பதற்றத்தோடு காணப்பட்டார்கள். இதனை அடுத்து புலிகளின் வேவுப்படை பிரிவு அங்கே சென்று விசாரணைகளை நடத்திக்கொண்டு இருக்க சோதனைப் பிரிவு சோதனைகளை நடத்த. வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் இருந்து பொலித்தீன் பைகளில் கட்டப்பட்ட நிலையில் ஆயுதங்கள் மீட்க்கப்பட்டது.
1990களில் யாழ்ப்பாணத்திற்கு பொருளாதாரத் தடை இருந்தது. அதாவது உணவுப் பொருட்களை மட்டுமே கொழும்பில் இருந்து யாழ் கொண்டு செல்ல முடியும். அந்த வேளைகளில் லாரி உரிமையாளர்களாக இருந்த பல முஸ்லீம்கள் கொடிகட்டிப் பறந்தார்கள். அதிலும் “முபீன்” என்னும் பெரும் செல்வந்தரிடம் 40க்கும் அதிகமான லாரிகள் இருந்தது. இவர் உணவு பொருட்களை யாழ் கொண்டு வரும் வேளை. சிங்கள அரசு கொடுத்துவிட்ட பெருந்தொகையான ஆயுதங்களையும் கொண்டு வந்து யாழில் பல முஸ்லீம்களிடம் கொடுத்து அதனை மறைவாக வைத்திருக்க சொல்லி இருந்தார். ஏன் எதற்கு என்று சொல்லவில்லை.
இதனை கண்டறிந்த புலிகள் சகல வீடுகளையும் சோதனை போட்டு பெரும் தொகையான ஆயுதங்களை மீட்டார்கள். உடனே புலிகளின் மத்திய குழு கூடி ஒரு முடிவை எட்டினார்கள். அது அதிர்சியான முடிவு தான். யாழில் இருந்து முஸ்லீம்களை மனித நேயத்தோடு அனுப்பி வைப்பது. அவர்கள் தமது உடமைகளை எடுத்துச் செல்லலாம். வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் காணிகளை விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். மீண்டும் வரும்போது கையளிக்கப்படும். இதுவே எட்டப்பட்ட முடிவு. அதனை சுட்டறிக்கையாக அச்சடித்து உடனே அனைத்து முஸ்லீம் மத தலைவர்களிடம் கொடுத்தார்கள். வழி அனுப்பி வைத்தார்கள்.
நாங்கள் உயிரைக் கொடுத்து சிங்களவனிடம் இருந்து, எமக்கான உரிமை வேண்டும். தனி அரசு ஒன்று அமைந்தால் தான் தமிழர்கள் நிம்மாதியாக வாழ முடியும் என்று போராடுகிறோம். போராட்டத்தில் எங்களுக்கு உதவி செய்ய வேண்டாம். காட்டிக் கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள், ஆமி காரன் முன்னேறி வந்தால் , வந்த ஆமிக்காரனுக்கு ஆயுத சப்பிளை செய்ய ஆயுதங்களை இப்பவே தயார் செய்து வைத்திருக்கிறீகள். எங்கள் போராட்டத்தை அதள பாதாளத்தில் தள்ள பார்கிறீர்கள். உங்களில் நல்லவர் யார் ? கெட்டவர் யார் என்று நாம் விவாதிக்க வரவில்லை. எனவே நீங்கள் போரில் இறக்காமல் இருக்கவும். பாதுகாப்பாக இருக்கவுமே உங்களை நாம் அனுப்பி வைக்கிறோம் என்று மதிப்போடு கூறி மனித நேயத்தோடு அனுப்பி வைத்தார்கள் புலிகள்.
இன்று யாழில் குண்டு வெடிக்கவில்லையே…. அன்று புலிகள் எடுத்த முடிவு. இன்று இதனை எத்தனை பேர் சரி என்று சொல்கிறார்கள். அன்று எதிர்த்தவர்கள் கூட இன்று மனம் மாறியுள்ளார்களே… இதுவே புலிகளுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும்.

No comments:

Powered by Blogger.