Header Ads

Header Ads

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பிரித்தானியர்... 13 வயதான குழந்தைகளை விட்டு பிரித்த இரக்கமற்ற கொரோனா!

ஒரே பிரசவத்தில் நான்கு அதிசய குழந்தைகளை பெற்றெடுத்த பிரித்தானிய பெண்மணி, அந்த குழந்தைகளுக்கு 13 வயதே ஆகியுள்ள நிலையில், கொரோனாவால் அவர்களை விட்டு பிரிய வேண்டியதாயிற்று.
Shabnum Sadiq (39) பிரித்தானியாவின் Slough பகுதியில் லேபர் கட்சி சார்பில் கவுன்சிலராக பணியாற்றிவந்தார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக Shabnum பாகிஸ்தானுக்கு சென்றிருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
24 நாட்கள் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்க திணறிவந்த நிலையில், திங்களன்று அவரது உயிர் பிரிந்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி, Shabnum ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

அவர்களுக்கு இப்போது 13 வயது ஆகும் நிலையில், இந்த இரக்கமற்ற கொரோனா, தாயையும் பிள்ளைகளையும் பிரித்துவிட்டது.

No comments:

Powered by Blogger.