Header Ads

Header Ads

ஸ்பெயினில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,238ஆக அதிகரித்துள்ளது. எனினும் புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்பெயின் அரசு, நேற்று (புதன்கிழமை) புதிதாக 6,180 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த சூழ்நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 5,756ஆக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஸ்பெயினில் புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று ஸ்பெயினில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஸ்பெயினில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையை நீட்டிப்பது தொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், ஸ்பெயினில் நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வர தொடங்கியுள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் தெரிவிக்கிறார்.

No comments:

Powered by Blogger.