Header Ads

Header Ads

நேற்று மட்டும் 300 பேருக்கு புதிதாக கொரோனா - ஆஸ்திரேலியாவில் என்ன நிலை?

ஆஸ்திரேலியாவில் நேற்று மட்டும் 300 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் தற்போது வரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் பலியாகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஊடரங்கு உத்தரவானது, அடுத்த 90 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு கடும் அபராதங்களை அந்நாட்டு அரசு விதித்து வருகிறது.
இந்நிலையில் மகிழ்ச்சி தரும் செய்தியாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் இனோவியோ மருந்து நிறுவனம் ஆகியவை தனித்தனியே உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை ஆஸ்திரேலியா சோதிக்க தொடங்கியுள்ளது.
இதே போல பல நாடுகள் கொரோனா தொடர்பான தடுப்பு மருந்துகளை சோதித்து வந்தாலும், முழுமையான மருந்தை உருவாக்க இன்னும் காலம் ஆகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

No comments:

Powered by Blogger.